நதியா பாணிக்கு மாறிய நயன்தாரா..?


முதலில் நதியாவுக்கு என்ன பாணி, அதை சொல்லுங்கள் என நீங்கள் கேட்பது புரிகிறது.. 30 வருட சினிமா உலகத்தை அறிந்தவர்களுக்கு நதியா தனது படங்களை தேர்ந்தெடுக்கும் முறையும், அதற்காக போடும் கண்டிஷன்களும் நன்றாகவே தெரிந்திருக்கும்.. எந்த ஹீரோவுடனும் நெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்பார்.. ஹீரோ முக்கியம் இல்லை, கதை நன்றாகவும் தனக்கு முக்கியத்துவம் உள்ளதாகவும் இருந்தால் போதும் என ஒற்றைக்காலில் நிற்பார்..

அவர் ஆரம்பத்தில் இருந்தே எடுத்த கொள்கை முடிவு.. அதன்படியே நடித்தார்.. அதனால் தான், அவர் நடித்து வந்த காலகட்டத்தில், ‘முத்த நாயகன்’ என பெயர் எடுத்த கமலுடன் ஒரு படத்தில் கூட இணைந்து நடிக்கவே இல்லை.. ஆனால் இந்த பத்து வருடங்களில் நயன்தாரா, தான் எந்த அளவுக்கு காட்டவேண்டுமோ அந்த அளவுக்கு காட்டு காட்டென்று காட்டிவிட்டாரே இப்போது போய் நதியா போல மாறவேண்டிய அவசியம் என்ன என்கிற கேள்வி எழலாம்.

காரணம் இயக்குனர் விக்னேஷ் சிவனுடனான காதல் தான். சொல்லப்போனால் இருவரும் ரகசிய திருமணம் செய்து எக்மோரில் தனிக்குடித்தனமே நடத்துகிறார்கள் என்று கூட செய்திகள் உலாவருகின்றன. தற்போது நயன்தாரா நடித்துவரும் டோரா, இமைக்கா நொடிகள், அறம், கொலையுதிர் காலம் ஆகிய படங்களில் எல்லாம் ஹீரோக்கள் இல்லை.. அதாவது நயன்தாரவுக்கென ஜோடி யாருமில்லை..

இதை கணக்கில் எடுத்து பார்க்கும்போது இனி ஹீரோக்களை கட்டிப்பிடித்து நடிப்பதில் அவருக்கு உடன்பாடு இல்லை என்றே தெரிகிறது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார் என்றால், சிவகார்த்திகேயன் நயன்தாராவுக்கு தம்பி மாதிரி.. அதுமட்டுமல்ல, ஏற்கனவே ஒப்புக்கொண்ட படம் என்பதால் ஜோடியாக நடிக்கிறார்.. அவ்வளவுதான். இப்போது புரிகிறதா அவர் நதியா ரூட்டில் பயணிப்பது..?