எம்பேரு இப்படி டேமேஜ் ஆகிடுச்சா ; அதிர்ச்சியில் நிக்கி கல்ராணி..!

நடிகை நிக்கி கல்ராணியை பொறுத்தவரை தமிழில் அதிகமான படங்களில் நடித்து வருகிறார். ஆனால் இன்னும் அவர் பெயர் சொல்லும்படியான நடிப்புக்கு தீனிபோடும் வேடங்கள் எதுவும் கிடைக்கவில்லை.. அதேசமயம் சமீபத்தில் வெளியான ‘ஹர ஹர மஹாதேவகி’ படத்திலும் அவர் நடித்திருந்தார்.

அடல்ட் காமெடி படமாக உருவான இப்படத்தில் கவுதம் கார்த்திக் நடித்திருந்தார். இப்படத்தில் ஏ வகை வசனங்களை நிக்கி கல்ராணி பேசினார். இதையடுத்து அவருக்கு ‘ஏ’ பட நடிகை என்று கோலிவுட்டில் முத்திரை விழுந்தது. இந்தநிலையில் கவுதம் கார்த்திக் நடிக்கவுள்ள மற்றொரு ஏ பாணி படமான ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ என்ற படத்திலும் நடிக்க நிக்கி கல்ராணியிடம் கேட்டபோது மறுத்துவிட்டாராம்.

மேலும் அதேபோல் சில அடல்ட் காமெடி படங்களிலும் கால்ஷீட் கேட்கப்பட்டது. தன் மீது அடல்ட் காமெடி நடிகை முத்திரை குத்தப்படுவதை உணர்ந்து அதிர்ச்சி அடைந்தாராம் நிக்கி. அப்படங்களில் நடிக்க மறுத்துவிட்டதுடன், தன் மீதான ஏ பட முத்திரையை நீக்க போராடி வருகிறார். அதனால் இனிமேல் நல்ல கதை, கேரக்டர்கள் கிடைத்தால் மட்டுமே கால்ஷீட் கொடுப்பது என உறுதியாக இருக்கிறாராம் நிக்கி கல்ராணி.