சிம்பு படத்துக்கு இப்போதே சிக்கல் ஆரம்பம்…!

சிம்பு நடிக்கும் படங்களுக்கு படம் வெளியாகும் வரை பைசா செலவில்லாமல் பப்ளிசிட்டி கிடைக்கிறது என்றால் அது இத்தனை வருடமாக தன்னைச்சுற்றி அவரே உருவாக்கிய சர்ச்சை நாயகன் என்கிற இமேஜினால் தான்.. அதற்கான அவரது உழைப்பை வர்ணிக்க வார்த்தைகளே கிடையாது..

ஆனால் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்திற்கு, படப்பிடிப்பு முடியும் முன்னர், சிம்பு இல்லாமலேயே வேறு ஒரு ரூட்டில் சிக்கல் எழுந்துள்ளது. படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் ரூ.25 லட்சம் தரவில்லை என பைனான்சியர் ரமேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

பணத்தை திரும்பித் தரும் வரை சிம்பு படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். ஐகோர்ட் நீதிபதிகளும், இந்த புகார் தொடர்பாக வருகிற டிச.23 ஆம் தேதிக்குள் மைக்கேல் ராயப்பன் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். சிம்பு படம் சிம்பு அல்லாத ஒரு நபரால் பிரச்சனை ஏற்படுவது அவரது பெருமைக்கே இழுக்கு என படக்குழுவினரில் சிலர் பேசிகொண்டது நம் காதில் விழுந்தது.