“ஊரைவிட்டே போகிறேன்” ; கமல் பாணியில் அதிரவைத்த பிரபல தயாரிப்பாளர்..!


பிரபல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா நடிகர்களின் சம்பளம் குறித்த தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.. அத்துடன் “ஊரைவிட்டே போகிறேன்” என கமல் பாணியில் கூறி அதிர வைத்துள்ளார். அதற்கான காரணத்தையும் அவரே சமீபத்தில் ‘என் பேரு சூர்யா’ பட பிரஸ்மீட்டில் மனக்குமுறலாக கொட்டினார்.

“இப்போ நடந்து முடிந்த ஸ்ட்ரைக் மூலமா சின்னச்சின்ன விஷயங்களைத்தான் சரி செய்துள்ளார்கள். ஆனால், நடிகர்கள் சம்பளம் மாதிரியான பெரிய விஷயங்களை நடிகர் சங்கம் தலையிட்டு நல்ல முடிவைச் சொல்லணும். உதாரணத்துக்கு, தமிழ்ல 100 கோடி ரூபாய் வியாபாரம் இருக்குன்னா, 50 கோடி ரூபாய் சம்பளம் கேட்குறாங்க. அதுல 10 கோடி ரூபாய் அட்வான்ஸா கேட்குறாங்க. ஆனா, தெலுங்குல 15 கோடி ரூபாய் சம்பளமும் 50 லட்ச ரூபா அட்வான்ஸும் கொடுத்தா போதும். அந்த புரிதல் தெலுங்கு நடிகர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் நிறையவே இருக்கு. அதுனாலயே அந்த இன்டஸ்ட்ரியே சுபிக்‌ஷமா இருக்கு..

தமிழ்ல அப்படி இல்லை. சுயநலமா நிறைய விஷயங்கள் நடந்துட்டு இருக்கு. வியாபாரத்தைக் கணக்கிட்டு நடிகர்கள் சம்பளத்தை நிர்ணயம் பண்ணணும். மத்த செலவு எல்லாம் சேர்க்காமல், துணை நடிகர்கள் சம்பளம் மட்டும் ஒரு நாளுக்கு பல லட்சங்கள் செலவாகுது. எல்லோரும் தயாரிப்பாளர் நிலைமையைப் புரிஞ்சு நடந்துக்கணும்.

இன்னும் ஒரு வருஷத்துக்குள்ள இந்தச் சூழல் மாறணும். நான் ஏற்கெனவே ஆந்திராவில் ஒரு ஆபீஸ் வாங்கிட்டேன். தமிழுக்கு டாடா சொல்லிட்டு, எங்கே வாழ முடியுமோ அதைத் தேடி போகுற சூழல் வந்திடும். படம் எடுத்து நஷ்டமாகுறதைவிட, எங்கே படம் பண்ணா லாபம் வருமோ, அங்கே போய் படம் பண்ற மனநிலைக்கு வந்துட்டேன்” என்றார் ஞானவேல்ராஜா.