தனது சீரியலில் நடித்த நடிகையை சொல்லாமல் கொள்ளாமல் நீக்கிய ராதிகா..!


விகடன் நிறுவனம் மற்றும் ராடன் நிறுவனம் தயாரித்த 18 நாடகங்களுக்கு மேலாகவும் நடித்துள்ளவர் நடிகை சபிதா ராய். குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ள இவர் ஒரு சில படங்களிலும் நடித்து வருகிறார்.. ராடன் நிறுவனத்தில் ‘தாமரை’, ‘இளவரசி’நாடகங்களில் நடித்த இவர் தற்போது ‘வாணி ராணி’ நாடகத்தில் நடித்து வருகிறார்.

‘வாணி ராணி’ நாடகத்தின் நிர்வாக மேலாளர் சுகுமார் என்பவருக்கு 20 ஆயிரம் கடனாக கொடுத்தது உதவியது, பிற்பாடு பிரச்சனையாக மாறி, சுகுமாரின் வீட்டுக்குச்சென்று இவர் சண்டை போடும் அளவுக்கு நிலைமை கைமீறி போனது.. அதன்பின் இவர்கள் சமரசம் ஆகிவிட்ட போதிலும் சுகுமாரின் பக்கத்து வீட்டில் இருக்கும் பாலிமர் தொலைக்காட்சி நிருபர் மூலமாக இந்த விவகாரம் சேனலில் மிகவும் தவறாக சித்தரிக்கப்பட்டு ஒளிபரப்பானது.

இதனால் மிகுந்த மண உளைச்சலுக்கு ஆளான சபிதா ராயை, ராடன் டிவி நிறுவனரான ராதிகா சரத்குமார் என்ன பிரச்சனை என்று கூடக் கேட்காமல் வேலையை விட்டு தூக்கிவிட்டார். தற்போது நடிகர் சங்கத்தில் விஷால் மற்றும் கார்த்தியிடம் இந்த பிரச்சனையை அவர் கொண்டு செல்ல, அவர்கள் இந்த விஷயத்தில் ஆவன செய்வதாக நம்பிக்கையும் தைரியமும் அளித்துள்ளார்களாம்.