சகலகலா வல்லவன் – விமர்சனம்

புதிதாக திருமணமான தம்பதிகளுக்குள் சண்டை வந்தால் யாரும் அவர்களை விலக்குவதற்காக செல்லவேண்டாம்.. அவர்களே அவர்களது பிரச்சனையை சரிசெய்துகொள்வார்கள் என்கிற அரிய (!) கருத்தை சொல்லும் படம் தான் சகலகலா வல்லவன்.

கிராமத்தில் தந்தை பிரபுவின் சொல் மீறாத பிள்ளையான ஜெயம் ரவி, உதார் பார்ட்டியாக உலாவரும் சூரியின் முறைப்பெண்ணான அஞ்சலியை காதலிக்கிறார். தனது மகள் திரிஷாவின் திருமணத்துக்காக பட்டணத்தில் நடக்கும் கல்யாணத்திற்கு அந்த கிராமத்தையே அழைக்கிறார் ஜெயம் ரவியின் மாமாவான ராதாரவி.

திருமண தினத்தன்று மணமேடையில் அமர்ந்திருக்கும் போலீஸ் மாப்பிள்ளையை போலி என்கவுண்டர் விவகாரத்தில் கைது செய்து அழைத்துச்செல்கின்றனர் போலீஸார். திருமணம் நின்றுவிட்டதே என ராதாரவி கலங்க, தனது மகன் ஜெயம் ரவியை த்ரிஷாவுக்கு தாலிகட்ட சொல்கிறார் பிரபு.

இக்கட்டான நிலை என்றாலும் தந்தை சொல் மீறாத பிரபுவும், வேறுவழியின்றி தனது காதலை துறந்து த்ரிஷாவை திருமணம் செய்து ஒரு மாதம் டவுனிலேயே குடித்தனம் நடத்துகிறார்.. ஆனால் தனக்கு நிகரான மாப்பிள்ளை இல்லை என்பதால் ஜெயம் ரவியை முதலிரவில் இருந்தே நெருங்கவிடாமல் அலட்சியமாக நடத்தும் த்ரிஷா, ஒருமாதம் முடிவதற்குள்ளாகவே அவரிடம் டைவர்ஸ் கேட்கிறார்.

காதலித்தவளையும் கைபிடிக்க முடியாமல், கட்டியவளும் டைவர்ஸ் கேட்கும் நிலையில் ஜெயம் ரவி என்ன முடிவெடுத்தார் என்பது க்ளைமாக்ஸ்.

ப்ளஸ்

· ஜெயம் ரவி-அஞ்சலியின் காதல் கலாட்டாக்கள்

· அஞ்சலியை தக்கவைக்க சூரி எடுக்கும் புஸ்வான நடவடிக்கைகள்

· கால்மணி நேரமே வந்தாலும் டபுள் ஆக்சன் விவேக்கின் டபுள் ட்ரீட்

· நான் கடவுள் ராஜேந்திரனின் உக்கிரமான போலீஸ் கலாட்டா

· வொர்க் அவுட் ஆகும் சூரியின் 50 சதவீத காமெடி டயலாக்குகள்

· பிரபு, ராதாரவியின் வழக்கமான யதார்த்தமான நடிப்பு


மைனஸ்

· தமனின் இசையில் தெலுங்கு வாடை அடிக்கும் பாடல்கள்

· அந்த பாடல்களும் அடிக்கடி வருவது

· சிவாஜி காலத்தில் இருந்து பார்த்து சலித்த கதை

· வீக்கான திரைக்கதை

· திரும்பத்திரும்ப சூரியை போலீஸ் புரட்டி எடுப்பது

· த்ரிஷாவின் ரெடிமேட் நடிப்பு


டூமச்

· இக்கட்டான சூழலில் தன்னை திருமணம் செய்து தன் தந்தையின் மானத்தை காப்பற்றிய ஜெயம் ரவியை த்ரிஷா மோசமாக நடத்தும் விதம்

· சிரிப்பை வரவழைக்கிறது என்றாலும் விவேக் – செல் முருகனின் இரட்டை வசன காமெடி

த்ரீ மச்

· ஒரு மினி பஸ்ஸையே வெடிவைத்து சிதறடித்து, ஜெயம் ரவியுடன் பயங்கரமாக சண்டையெல்லாம் போட்டு அவரையும் த்ரிஷாவையும் விருந்துக்கு அழைத்துச்செல்லும் விவேக்கின் திட்டம்

· காவி வேட்டி கட்டிய சாமியார் வேடத்தில் ஜெயம் ரவியை ஜெயிலில் அடைப்பதற்காக ஆரம்பத்தில் சொல்லப்படும் பில்டப் காரணங்கள்

சகலகலா வல்லவன் பட்டம் யாருக்கு பொருந்துகிறது..?

· த்ரிஷாவை திருமணம் செய்துகொண்டு அவரை தனது வழிக்கு கொண்டுவர முடியாமல் தடுமாறி கண்கலங்கும் ஜெயம் ரவிக்கா..?

· எவ்வளவு அடித்தாலும் தாங்கிக்கொண்டு ஆரம்பத்தில் அஞ்சலியையும் பின்னர் த்ரிஷாவையும் லவ் பண்ண கொஞ்சமும் அசராமல் முயற்சிக்கும் சூரியா..?

· மீசை எடுத்துவிட்டால் டெரர் காட்டுவதும், தன்னால் முன்பு போல கைதிகளை அடிக்க முடியாததால் தன்னைப்போன்ற ரோபோவை செட் பண்ணி பட்டையை கிளப்பி இறுதியில் பைத்தியமாகும் நான் கடவுள் ராஜேந்திரனா..?

விடை தெரிந்த விக்கிரமாதித்தன்கள் பதில் சொல்லலாம்..