பார்வதியை பாராட்டிய சமந்தா


கடந்த ஏப்ரல் மாத இறுதியில் மலையாளத்தில் பார்வதி நடித்த ‘உயரே’ என்கிற படம் வெளியானது. இந்த படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பார்வதி. உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவான இந்த கதையும் இதில் பார்வதியின் நடிப்பும் விமர்சகர்கள், ரசிகர்கள் மட்டுமல்லாது பிரபலங்களிடம் இருந்தும் தொடர்ந்து பாராட்டுகளை பெற்று வருகிறது.

இந்த நிலையில் நடிகை சமந்தா தற்போது இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு பார்வதிக்கு பாராட்டுக்களையும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது ;

“இதோ இப்போதுதான் ‘உயரே’ படம் பார்த்தேன்.. இந்த படம் உங்களை கோபப்பட வைக்கும்.. அழவைக்கும்.. யோசிக்க வைக்கும்.. அன்பு செலுத்த வைக்கும்.. நம்பிக்கை கொள்ள வைக்கும்.. ஏதோ ஒரு வகையில் உங்களை தூண்டும். பார்வதி, நீங்கள் எங்கள் பெருமைக்குரியவர்” என்று பாராட்டியுள்ளார். மேலும் வித்தியாசமான முயற்சிக்காக படத்தின் இயக்குனர் மனு அசோகனையும் கதாசிரியர் பாபி சஞ்சய்யையும் பாராட்டியுள்ளார் சமந்தா.