ரெட் ஜெயன்ட்டை விட்டு ஒதுங்கும் சந்தானம்..!

சினிமா என்று வந்துவிட்டால் நண்பர்களாக இருந்தாலும் பிசினஸ் விஷயத்தில் சில முட்டல் மோதல்கள் நடக்கத்தான் செய்யும். சந்தானம் தயாரிப்பாளராக ஆனபோதும் அது தான் நடந்திருக்கிறது.. இனிமே இப்படித்தான் ரிலீஸ் விவகாரத்தில் சந்தானத்துக்கும் உதயநிதிக்கும் வரவு செலவு சம்பந்தமாக மனஸ்தாபம் ஏற்பட்டதாக சொலப்படுகிறது.

நகமும் சதையுமாக இருந்த சந்தானமும் உதயநிதியும் நடிப்பு தாண்டி பிசினசிலும் இணைய முயற்சித்தார்கள். அதன் விளைவாகத்தான், தான் தயாரித்து ஹீரோவாக நடித்த ‘இனிமே இப்படித்தான்’ படத்தையும் ரெட் ஜெயன்ட் வசம் ரிலீஸ் செய்ய ஒப்படைத்தார்.

அதில் இப்போது குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதால் படத்தில் இணைந்து நடிக்கும் தங்களது நட்பு வியாபாரத்தால் பாதிக்கப்படவேண்டாம் என சந்தானம் முடிவெடுத்துள்ளாராம். அதனால் தனது புதிய படத்தை, தனக்கு ஆரம்பத்தில் இருந்து ஆதரவு கொடுத்துவரும் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தை தயாரிக்க சொல்லி கேட்டு அதன் கதவை தட்டியிருக்கிறாராம் சந்தானம்.