சுசீந்திரன் பட நாயகிக்கு ஏற்பட்ட கதியை பார்த்தீர்களா..?


சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள நெஞ்சில் துணிவிருந்தால் நவம்பர் 10 கடந்த வெள்ளி கிழமை அன்று வெளியாகி திரை அரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப்படத்தின் ரீ-எடிடட் வெர்சன் இன்று முதல் அனைத்து திரையரங்குகளிலும் திரையிடப்படுகிறது. காரணம் படத்தின் ஆரம்ப காட்சிகள், அதாவது சந்தீப்-மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்துடன் ஒட்டாமல் இருந்தன.

இது படத்தின் வேகத்தை குறைப்பதாக விமர்சகர்கள், மக்களின் கருத்து மற்றும் நலம் விரும்பிகள் கருத்துக்களை கூறிவருவதால், அதை கருத்தில் கொண்டு நெஞ்சில் துணிவிருந்தால் திரைப்பட குழு கதாநாயகி மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கியுள்ளது.

இது பற்றி இயக்குநர் சுசீந்திரன் கூறும்போது, “நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் இருபது நிமிடத்தை நாங்கள் நீக்கி உள்ளோம். கதாநாயகி மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளது. நாங்கள் 15 நாட்கள் மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கினோம். மெஹ்ரீன் நடித்த காட்சிகளை சூழ்நிலை காரணமாக நீக்கினோம். இதற்காக நான் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

படம் வருவதற்கு முன்பே கதாநாயகி சம்பந்தப்பட்ட காட்சிகளை குறைப்பது வழக்கம்.. அப்போதுகூட முழுதுமாக நீக்க மாட்டார்கள்.. ஆனால் இப்படி படம் வெளியானபின் கதாநாயகி நடித்த அனைத்து காட்சிகளையும் நீக்குவது இதுதான் முதன்முறையாக இருக்கும்..

இது சம்பந்தப்பட்ட நாயகிக்கு எவ்வளவு அவமானம்…? இன்னொரு பக்கம் சுசீந்திரன் தன்னிடம் சரக்கு காலியாகிவிட்டது என்பதையும், எடிட்டிங்கில் கோட்டை விட்டதையும் அவரே ஒப்புக்கொண்டு விட்டதை தான் அவரது இந்த நடவடிக்கை காட்டுகிறது.