தம்பி!.. நீயெல்லாம் டம்மி பீஸ்னு உனக்கே தெரியாதா! – வடிவேல் அலப்பரை!

தெனாலிராமன் படத்தை தொடர்ந்து அந்தப்படத்தின் இயக்குனர், யுவராஜ் தயாளன் இயக்கத்தில் வடிவேலு மீண்டும் ‘எலி’ படத்தில் நடித்து வருகிறார் இல்லையா..? வடிவேலுவுக்கு ஜோடியா நடிக்கணுமா என்றெல்லாம் யோசிக்காமல் இந்தப்படத்தின் கதையையும், தனது புதுவிதமான கதாபாத்திரத்தையும் கேட்டு கதாநாயகியாக நடிக்க சம்மதித்துள்ள நடிகை சதா, கவர்ச்சியிலும் காமெடியிலும் விருந்து படைக்க இருக்கிறார்.

தெனாலிராமன் படம் பப்படமாகியதற்கு முக்கிய காரணமே வடிவேலு தான் என்று படத்தில் வேலை பார்த்த பலரும் புலம்பினார்கள்.. காரணம் தனது ரீ என்ட்ரி மிக பிரமாண்டமாக இருக்கவேண்டும் என நினைத்த வடிவேலு, படத்தின் இயக்குனர் யுவராஜ் தயாளனை “தம்பி அப்படி ஓரமா ஒக்காந்து, அண்ணன் எப்படி டைரக்ட் பண்றேன்னு வேடிக்கை மட்டும் பாருங்க” என்கிற ரேஞ்சில் தானே டைரக்டர் போல நடந்துகொண்டார்.

படத்தில் காமெடி என்கிற பெயரில் அவர் பண்ணியதெல்லாமே ‘கடி’ ரகம் தான். இதனால் தன் பேரல்லவா ரிப்பேராகி விட்டது என புலம்பிய யுவராஜை சமாதனப்படுத்தும் விதமாகத்தான் மீண்டும் அவரை வைத்தே ‘எலி’ படத்தை ஆரம்பித்தார் வடிவேலு.

படத்தின் பெயர்தான் எலியே தவிர, பபட்ப்பிடிப்பு தளத்தில் வடிவேலு செய்யும் அலப்பரைகள் படத்தை ‘பெருச்சாளி’ ஆக்கிவிடும்போலத்தான் தெரிகிறதாம். வடிவேலு சும்மாவே காட்டு காட்டென்று காட்டுவார், இப்போது சதா வேறு ஜோடியாக நடிக்கிறாரா.. சொல்லவா வேண்டும்.. அவர் முன்னே தனது பவிசை காட்டும் விதமாக, ஷூட்டிங்ஸ்பாட்டில் யுவராஜை போன படம் போலவே ஓரங்கட்டிவிட்டு, தனது ஸ்டைலில் தன் இஷ்டப்படி படத்தை எடுத்து வருகிறாராம்.

மீண்டும் தனது தலைவிதியை நினைத்து நொந்துகொண்ட யுவராஜ், இவருக்கு படம் இயக்கும் ஆசை இருந்தால் பேசாமல் தானே படத்தை இயக்கிவிட்டு தன பெயரை போட்டுக்கொண்டு போகவேண்டியதுதானே.. அதைவிட்டுவிட்டு எதற்காக ‘மன்மதன்’ சிம்பு போல அடுத்தவர் பெயரை டேமேஜ் பண்ண முயற்சிக்கிறார் என தனது நண்பர்களிடம் புலம்பி வருகிறாராம். அதானே.. டைரக்சன் ஆசையிருந்தால் நேரடியாக தனது பெயரிலேயே படத்தை இயக்கிவிடவேண்டியது தானே.. அதற்கு எதற்கு டம்மியா ஒருத்தர் என்கிறார்கள் படப்பிடிப்பு குழுவினர்.