அட்லியை கேடயமாக்கி அனுப்பி வைத்த விஜய்யும் தாணுவும்..!


தெறி’ படம் நாளை மறுநாள் (ஏப்-14) அன்று வெளியாகும் நிலையில் இந்தப்படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பட்டு வந்தது.. விஜய்யை சந்தித்து படம் தொடர்பான தனகளது சந்தேகங்களை கேட்டு அவரை தெறிக்க விடலாம் என வந்த பத்திரிகையாளர்களுக்கு ஷாக்கோ ஷாக்.. எஸ்.. வழக்கம்போல விஜய் வரவில்லை.. கூடவே தாணுவும் வரவில்லை..

தாணுகூட ரிலீஸ் நேரம் என்பதால் அந்த வேலைகளில் பிஸியாக இருப்பார் என்று விட்டுவிடலாம்.. ஆனால் விஜய் தனது பட ஆடியோ ரிலீஸ் ஒன்றுக்கு மட்டும் வந்துவிட்டு, மற்றபடி அஜித் பாணியில் டிமிக்கி கொடுக்க ஆரம்பித்துல்லதி இந்த பிரஸ்மீட்டுக்கு வராததன் மூலம் நிரூபித்துள்ளார் என் பலரும் முணுமுணுத்ததை பார்க்க முடிந்தது..

ஆனால் ‘தெறி’ படம் இன்னும் பல தியேட்டர்களில் ரிலீஸாவதில் சிகள் நீடிப்பதால், எங்கள் தாங்கள் வந்தால் பத்திரிகையாளர்களுக்கு அதுகுறித்த விளக்கம் சொல்லவேண்டிய தர்மசங்கடம் ஏற்படும் என்பதால் தான் அட்லியை மட்டும் கேடயமாக அனுப்பி எஸ்கேப் ஆகிவிட்டார்கள் என்றும் சொல்லப்பட்டது. அதுசரி, பிரஸ்மீட்டுக்கு எமி ஜாக்சன் வரும்போது, சமந்தாவால் மட்டும் எப்படி வரமுடியாமல் போயிற்று..?