விஜய்சேதுபதி, விக்னேஷ் சிவன், நயன்தாரா கூட்டணியில் மீண்டும் புதிய படம்!

விஜய்சேதுபதி நயன்தாரா இணைந்து நடித்த நானும் ரவுடிதான் திரைப்படம்2015 வெளியாகி வசூல் ரீதியாகவும் மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். அப்பொழுது விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்து இதுவரை இருவரும் காதலித்து வருகின்றனர்.

அதன்பிறகு விக்னேஷ் சிவன் சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கினார். இப்படமும் நல்ல வசூலை பெற்று தந்ததுடன் விக்னேஸ்வரனுக்கு நல்ல பெயரையும் பெற்றுத்தந்தது. அதன்பிறகு சிவகார்த்திகேயனை வைத்து புதிய படத்தை இயக்குவதாக இருந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் சில பல காரணங்களால் படத்தை இயக்க முடியவில்லை.

தற்போது புதிய கதை ஒன்றை தயார் செய்து விஜய் சேதுபதியிடம் கூறி இருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். இந்த கதையை விஜய் சேதுபதிக்கு பிடித்துப்போகவே மேமாதம் மே மாதம் படப்பிடிப்பு துவங்குவதற்கு திட்டமிட்டுள்ளனர். இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் நயன்தாரா மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் நானும் ரவுடிதான் படத்தின் வெற்றிக் கூட்டணி இப்படத்திலும் இணைந்துள்ளதால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இப்பொழுது ஏற்பட்டுள்ளது.

தற்பொழுது விஜய் சேதுபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.