வரலட்சுமியுடன் இடைவெளிவிட்ட விஷால்..!


வரலட்சுமியும் விஷாலும் நெருங்கிப்பழகி ஊடகங்களின் பூடகங்களுக்கு தீனி போட்டாலும், இருவரும் தங்களை காதலர்களாக காட்டிக்கொண்டது இல்லை.. திடீரென இடையில். “காதல் முறிந்தது. மேனேஜர் மூலமாக காதல் முறிவை அனுப்பும் ஆளை பார்த்திருக்கிறீர்களா” என ட்வீட் போட, ஆளாளுக்கு அது விஷால் தான் என முடிவுகட்டி கதை எழுதினார்கள்..

எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் ஜோடி போட்டுக்கொண்டு வந்து மீடியாவுக்கு தீனி போட்டுக்கொண்டிருந்த இந்த ஜோடி அதன்பின்னர் எந்த நிகழ்ச்சிகளிலும் ஒன்றாக தலைகாட்டவே இல்லை.. இந்தநிலையில் தான் வரலட்சுமி, பெண்களை பாதுகாக்கும் பொருட்டு ‛சேவ் சக்தி’ என்ற அமைப்பை தொடங்கியுள்ளார். மகளிர் தினமான நேற்று இந்த அமைப்பை முறைப்படி ஆரம்பித்துள்ளார்.

இந்த நிகழ்வில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்ததுடன் கையெழுத்தும் போட்டுவிட்டு சென்றனர்.. இந்த நிகழ்வில் விஷாலும் கலந்துகொண்டார். ஆனால் முன்புபோல வரலட்சுமியுடன் நெருக்கம் காட்டாமல் கொஞ்சம் தள்ளியே அமர்ந்திருந்தார். வரலட்சுமியும் அவ்வாறே இடைவெளியை கடைபிடித்தார்.