இந்தியே பிடிக்காத ராதாரவி செய்த காரியம் என்ன தெரியுமா..?


ராதாரவியை பொறுத்தவரை மேடை கிடைத்தல் பேசும் அத்தனை மணித்துளிகளிலும் பார்வையாளர்களை கலகலப்பாக சிரிக்க வைப்பதில் வல்லவர்.. அவருடைய தந்தை எம்.ஆர்.ராதாவின் பேரன் ஜக் என்பவர் இயக்கியுள்ள சங்கிலி புங்கில் கதவ தொற’ படஹ்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட ராதாரவி, வழக்கம்போல் இங்கேயும் தனது நக்கல் பேச்சை வெளிபடுத்த தவறவில்லை..

“தமிழ்நாடு முழுக்க எங்கள் குடும்பத்துக்கு கிளைகளை திறந்து வைத்திருக்கிறார் எங்கள் அப்பா” என்று கலகலப்பாக பேச ஆரம்பித்த ராதாரவி, “இந்தி படமாக இருந்தாலும் சரி, மொழியாக இருந்தாலும் சரி எனக்கு ஆகாது. அப்படி இந்தி படங்கள் எடுத்துக் கொண்டிருந்த பிரியதர்ஷனிடம் ஐக்கை சேர்த்து விட்டேன். பிறகு கமல்ஹாசனிடம், கமலை அழ வைத்த ஒரே படமான விஸ்வரூபம் படத்தில் வேலை பார்த்தான். ஐக் கடுமையான உழைப்பாளி. இந்த படத்தை சிறப்பாக எடுத்துள்ளான்” என கலகலப்பாக பேசினார்.