சிம்புவுக்கு டி.ஆர் சொன்ன தஞ்சாவூர் கல்வெட்டு வாக்கியம்..!


இன்றைக்கு திரையுலகில் இருக்கும் நடிகர்களிலேயே டி.ராஜேந்தர் ஒருவருக்குத்தான் எந்த நடிகைகளையும் தொட்டு நடிக்காத குணசீலன் என்கிற நல்ல பெயர் உண்டு.. இவரது படத்தில் நடிக்கும் மற்றவர்கள் அந்த வேலையை செவ்வனே செய்தாலும் இவருக்கு அதில் துளியும் உடன்பாடில்லை..

ஆனால் இவருக்கும் சேர்த்து வட்டியும் முதலுமாக இவரது மகன் சிம்பு உதட்டை கடித்து இழுப்பது, அதையே போஸ்டர் அடித்து தெருத்தெருவாக ஓட்டுவது என மன்மதனாகவே வலம் வந்தார்.. அப்படிப்பட்ட அப்பாவுக்கு இப்படி ஒரு புள்ளையா என கேட்காதவர் பாக்கி இல்லை..

ஆனால் சமீபத்தில் தான் சிம்பு இந்தமாதிரி எல்லாம் நடிபதற்கு காரணமானவர் யார் என்கிற உண்மை தெரியவந்துள்ளது.. வேறு யார்.. சாட்சாத் குணசீலனான அவரது தந்தை டி.ஆரே தான். “என்னைப்போல நீயும் ஏகபத்தின் விரதத்தி கடைபிடிக்க வேண்டாம்.. உன் பாணியில் புகுந்து விளையாட்டு” என தஞ்சாவூர் கல்வெட்டில் பாதிக்கும் அளவுக்கு முக்கியமான வாக்கியத்தை சிம்புவுக்கு சொல்லி அவரை உசுப்பேற்றி விட்டு ரணகளமாக்கிய பெருமை டி.ஆரையே சேரும்..