ஜோதிகா முன்னாடி போவார்.. சூர்யா பின்னாடி போவார்.. ஏன் தெரியுமா..?


வழக்கமாக கணவன் முன்னாடி நடக்க, மனைவி தானே பின்னாடி போவார்.. சூர்யா-ஜோதிகா விஷயத்தில் இது புதுசா இருக்கே என நீங்கள் நினைக்கலாம்.. ஆனால் இதற்கான காரணத்தை இன்று நடைபெற்ற ‘மகளிர் மட்டும்’ விழாவில் ஜோதிகாவே கூறியுள்ளார்.

அதாவது சூர்யா பெரிய பட்ஜெட் படங்களில் நடிப்பவராம்.. அதனால் அவர் கொஞ்சமா லேட்டாக போவாராம்.. ஆனால் தான் சின்ன பட்ஜெட் படங்களில் நடிப்பதால் முதல் ஆளாக கிளம்பிவிடுவாராம் ஜோதிகா.. அவரது கணவர் சூர்யா வாசல் வரை வந்து ஜோதிகாவை காரில் ஏற்றிவிட்டு டாட்டா காட்டி அனுப்பி வைப்பாராம்.