கைக்கு வந்த படத்தை கோட்டை விட்ட சிம்பு..!


தற்போது நடிகர் சிம்பு, சுந்தர்.சி.யின் இயக்கத்தில் ‘வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற படத்தில் நடித்து வருகிறார் முதலில் படம் பொங்கலுக்கு ரிலீஸ்க்கு வருகிறது என்று சொல்லப்பட்ட இந்த படமானது பிறகு தள்ளி போனது.

இந்நிலையில் ‘றெக்க பட இயக்குனர் ரத்தின சிவா, இந்த படத்திற்கு முன்னர் நடிகர் சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்க இருந்தாராம். படத்தின் கதையை நடிகர் சிம்புவிடம் ரத்தினசிவா கூறியுள்ளார். சிம்புவுக்கு கதை பிடித்துவிட்டது. ஆனால் சிம்பு இப்படத்தை சில காரணங்களால் தவிர்த்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது.

இதனால் நடிகர் ஜீவாவுக்கு இந்த வாய்ப்பு சென்றுள்ளது. அவரும் ஓகே சொல்லிவிட்டதாக தெரிகிறது. இதனால் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஹீரோயினாக தெலுங்கு நடிகை ரியா சுமன் நடிக்க இருக்கிறாராம்.