லிங்கா படத்தில் நடிக்க வடிவேலு மறுத்தது இதனால் தான்..!

கத்திச்சண்டை படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்ததை தொடர்ந்து அதிரடியாக ரீ என்ட்ரி கொடுத்துள்ள வடிவேலு, தற்போது பி.வாசு இயக்கத்தில் ‘சிவலிங்கா’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்ல ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.. ஆனால் இதே வடிவேலுதான் ரஜினியுடன் ‘லிங்கா’ படத்தில் இணைந்து நடிக்க வாய்ப்பு வந்தபோது மறுத்தவர்.

அதற்கு காரணமாக அப்போது பல விதமாக சொல்லப்பட்டாலும், நேற்று நடைபெற்ற கத்திச்சண்டை படத்தின் பிரஸ்மீட்டில் அதற்கான காரணத்தை வடிவேலுவே கூறியுள்ளார்.. அதாவது லிங்கா படத்தில் இடைவேளைக்குப்பின் வரும் காட்சிகளில் தான் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும், அதிலும் மிக குறைவான காட்சிகளே இருந்ததாகவும் அந்த அவகாசத்தில் ரசிகர்களின் மனதை தனது காமெடியால் நிரப்புவது சிரமம் என்பதால் தான் அதை தவிர்த்துவிட்டதாகவும் கூறியுள்ளார் வடிவேலு..