நடிகர் திலீப்பின் நண்பருக்கு வந்த சிக்கல் கமலுக்கும் வருமா..?


பொதுவாக ஒரு சட்ட நடைமுறை இருக்கிறது.. அதாவது ஒரு பெண் பாதிக்கப்பட்டால், அவர் பற்றிய வழக்கு கோர்ட்டில் நடந்துகொண்டிருந்தால், அவரது பெயரை யாரும் தங்களது பேச்சில் பயன்படுத்த கூடாது என்பதுதான் அந்த நடைமுறை.

சமீபத்தில் கேரளாவில், அதாவது மலையாள திரையுலகையே உலுக்கி வரும் வழக்குதான் ‘தீபாவளி’ நடிகை கடத்தப்பட்டு பாலியல் சித்தரவதைக்கு ஆளான வழக்கு. சில் தினங்களுக்கு முன் நடிகர் கமல் இதுபற்றி பேசும்போது பேச்சுவாக்கில் சம்பந்தப்பட்ட நடிகையின் பெயரை குறிப்பிட்டார்..

அவர் ஒன்றும் தவறுதலாக குறிப்பிடவில்லை என்றாலும் கூட, சட்டப்படி அவர் மீது யார் வேண்டுமானாலும் வழக்கு தொடுக்கலாம். அதற்கான வாய்ப்பு இருக்கிறது… இருந்தாலும் கமல் அப்படி குறிப்பிட்டதற்கு தேவைப்பட்டால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்..

இப்படித்தான் சம்பந்தப்பட்ட இதே நடிகை பற்றி கருத்து தெரிவிக்கிறேன் என அவரது பெயரை பயன்படுத்தினார் மலயாள காமெடி நடிகரும் திலீப்பின் நண்பருமான அஜூ வர்கீஸ் என்பவர்.. ஆனால் அவர்மீது கேரளாவில் ஒருவர் வழக்கு தொடர்ந்துவிட்டார். இப்போது போலீஸ், விசாரணை என அலைந்துகொண்டிருக்கிறார் அந்த நடிகர்.

அந்தவகையில் கமல் மீது எப்படிடா வழக்கு போடாலாம் என காத்திருக்கும் சில ஈன ஜென்மங்களுக்கு இது ஒரு லட்டு மாதிரி வாய்ப்புதான்.. அதுசரி.. எதையும் தாங்கும் கமல் இதை தாங்கமாட்டாரா என்ன..?