“அமாவாசை” ஆடியோ விழாவில் நடிகர் மன்சூரலிகான் அதிரடி பேச்சு!

தமிழ் , தெலுங்கு , இந்தி ஆகிய மூன்று மொழிகளில ராகேஷ் சவந்த்தின் தயாரிப்பு & இயக்கத்தில் ஜெய் ஆகாஷ் கதாநாயகராக நடிக்க ,இசையமைப்பாளர் – சையது அகமது உள்ளிட்ட பல பாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கு பெற உருவாகி இருக்கும் திரைப்படம் தான் “அமாவாசை. ”

இங்க இந்த “அம்மாவாசை” பட பேனர்களில் அம்மாவின் நல்லாசியுடன் என ஜெவோட போட்டோ வ போட்டு இருக்காங்க… அவங்க நல்ல ஆட்சிதான் பண்ணினாங்க ஆனா அவங்க கூட இருந்தவங்க அவங்களை கொண்ணுட்டதா சொல்றாங்க .. அவங்க 4 நாயை வளர்த்திருந்தாக்கூட கொன்றவரை கடித்து கால் அடியில் போட்டி ருக்கும் . ஆனா , விசுவாசம் இல்லாதவங்களால இப்போ , எடப்பாடியா ? காட்பாடியா ..? ஒரே குழப்படியா இருக்கு … கூவத்தூர் பிரச்சினை இதோட முடிஞ்சுடு முன்னு நம்பலாம். கவர்னர் கூப்பிட்டிருக்கிறதா தகவல்கள் வருது .இந்தப் பட ஆடியோ விழா இப்போ தமிழகத்துக்கு விடிவு காலம் பிறக்கிற இந்த நேரத்துல நடக்குறது சந்தோஷமா இருக்கு …. அமாவாசைன்னு இந்த படத்துக்கு பெயர் வச்சிருந்தாலும் படம் முழுக்க பவுர்ணமியா பளிச்சுன்னு நிறைய நடிகைகள் பங்கு பெற்றிருப்பதே இந்தப் பட வெற்றிக்கு கட்டியம் கூறுகிறது. இந்தப் படத்தோட தயாரிப்பாளரும் இயக்குனரும் ஒருத்தரே தானம் .இந்தி பட உலகில் ராஜ்கபூர் மாதிரி நிறைய பேர் தயாரிப்பாளர் கூடவே , இயக்குனர் .அதே மாதிரி இங்கயும் நிறைய பேர்வரணும் மெட்ராஸ் கடற்கரையும் ஜல்லிக்கட்டு போராட்ட களமும்மாதிரி ,கூவத்தூரும் நம்ம ஊர் எம்எல்ஏக்களும் மாதிரி அமாவாசைன்னு இந்தப் படத்துக்கு பேர் வச்சாலும் பெளர்ணமியா பளபளபெண்கள் பங்கு பெரும் காட்சிகள் வறட்சியில தத்தளிக்கும் தமிழ்நாட் டுக்கு ஏற்ற மாதிரி இப்படத்தில் நிறையஇருக்கு .வறட்சி பிரதமர் மோடியின் டீ மானிடேஷன் பிளானால் ஏற்பட்டுள்ள பணத்தட்டுபாடுகளால் தமிழ் சினிமா தத்தளிக்கிறது . அதுக்கு சினிமாக்காரங்க ஒன்று சேர்ந்து காம்பன்சேஷன் கேட்கணும் .ஆனா , எந்த நாயும் அதைக்கேட்க மாட்டேங்குது சினிமா தொழிலாளர்களுக்கு ., பேட்டாவே செக்காத் தறேங்கறாங்க தயாரிப்பு தரப்புல … கேஷ் லஸ் இந்தியா ,பேஸ் லஸ் இந்தியா ஆயிடும்ங்கறதை யாருமே சொல்ல மாட்டேங்கறாங்க நாம பொண்ணுங்களுக்கு தனலட்சுமி ,பாக்கியலட்சுமி, ன்னு பேர் வைக்கிறது தனம் வீட்டிலே இல்லாம இருக்கக் கூடாது …. அப்படிங்கறதுக்காக தான் .கனிமொழி அம்மா வீட்டிலேயே கன் எடுத்துட்டு போய் மிரட்டு ரான் திருடன் ….. அங்கேயும் கேஷ் லஸ் .எல்லாத்துக்கும் காரணம் மோடி .அவரு பொண்டாட்டிய மற்ச்சி வச்சி பதவிக்கு வந்தவர் தானம் .அதனால இப்போ பணத்தையும் மறைக்க பார்க்கிறாரு …ஆயிரம் ரூபா நோட்ட பார்க்க முடியலை இரண்டாயிரம் நோட்டுக்கு சில்லறை புடிக்க முடியலை … காரணம் மோடியின் கேஷ் லஸ் இந்தியா .மாணவர் புரட்சிக்கு சப்போர்ட் பண்ணிய மாதிரி மீடியா இந்த மாதிரி விஷயங்களையும் மக்கள்ட்ட கொண்டு போகணும் . இந்த நிலையில தமிழ்நாடு நிலையான ஆட்சி இல்லாமல் தவிக்குது . கவர்னர் முன்னமே ஆட்சியமைக்க கூப்பிட்டிருப்பாரு ….இந்தம்மா , அதான் சின்னம்மா ,அரை இன்ச்க்கு மேக்-அப் போட்டுட்டு போயி நின்னதைப்பார்த்து “ப்பா” ன்னு பயந்தவர்
2 -நாள் காய்ச்சல் ஆயிட்டாரு …. இங்க ஜெய் ஆகாஷ் நடிக்கும் இன்னொரு படம் பேரு சொன்னாங்க … “ஆமா நான் பொறுக்கிதான் ” என்று ..இங்கு “நிறைய விஷயம் பொறுக்க வேண்டியிருக்கு … நான் கூட ஜல்லிகட்டு போராட்டத்திற்கு போய் குப்பைகளை பொறுக்கினேன் .. இப்போ எம் .எல் .ஏக்களை பொறுக்கிட்டிருக்காங்க .. கோஷ்டி ,கோஷ்டியா … ஒரு வழியா பொறுக்கி முடிச்சு ., எடப்பாடியோ, காட்பாடியோ, கொளப் பாடியோ குழப்படியில்லாமல் யாரோ வாங்க.. தமிழ்நாடு டெட் பாடி ஆகுறதுக்குள்ள … ஏன்னா , 2 மாசமா நீடிக்கும் பிரச்சினைகளில் , தமிழ்நாட்டை அன்ரெஸ்ட் லேயே வச்சிருக்காங்க .. அதனால சொல்ல வரேன் .. பாத்ரூம்லக் கூட இப்போல்லாம் சிசிடிவி வச்சிருக்காங்க … ஆனா போயஸ் கார்டன்லயும் , அப்பல்லோ ஹாஸ்பிடல் லயும் கேமிராவே இல்லையாம் …. இத எப்படி நம்புறது ? என்னமோ இனியாவது நல்லது நடந்து திரையுலகமும் , தமிழகமும் வாழ வேண்டும் …இந்த அமாவாசை படமும் திரையில் ஓட வேண்டும் என்று கூறி விடைபெறுகிறேன் …. என்று கூறி அமர்ந்தார்.

மன்சூரலிகானின் அதிரடி பேச்சைத் தொடர்ந்து அமாவாசை படத்தின் ஆடியோவும் வெளியிடப்பட்டது .முன்னதாக , இவ்விழாவில் நிர்வாக தயாரிப்பாளர் சூர்யா சின்ஹா , “அது விடாது” இயக்குனர் ஓம்கார் , அய்யனார் வீதி ஜிப்ஸி N.ராஜ்குமார், “செனனை டூ பாங்காக் “இயக்குனர் சந்தோஷ் , இசையமைப்பாளர் யு.கே .முரளி, பத்திரிகையாளரும் , படத்தொகுப்பாளருமான டிஎஸ்ஆர் சுபாஷ் “ஜி ப்ளஸ்” ராஜேஷ் , இப்பட நட்சத்திரங்கள் ஜெய் ஆகாஷ் ,ரிஷப், நடிகைகள் யாழினி, ரூபி , பங்கஜ், தேவராஜ், ஏஎப் புரடக்ஷன்ஸ் எம்.எம் ஆசிப் ,, தயாரிப்பாளர் இந்து ஒளிப்பதிவாளர் – தேவராஜ் , , கானா பிரபாகரன் , பெண்கள் நலம் – திலகவதி, ஸ்ரீநிதி , இப்படத் தயாரிப்பாளர் ராகேஷ் சாவந்த் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியது குறிப்பிடத்தக்கது.