கார்த்தி – ரகுல் ப்ரீத் சிங் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!

கார்த்தி நடிக்கும் புதிய படம். இமயமலை – யுரோப் நாடுகளில் பிரமாண்டமாக தயாராகிறது.

மாபெரும் வெற்றி பெற்ற “தீரன் அதிகாரம் ஒன்று” படத்தை தொடர்ந்து கார்த்தி , ரகுல் பிரீத்சிங் வெற்றி ஜோடி மீண்டும் இப்படத்தில் இணைகிறார்கள் .

மேலும் பிரகாஷ்ராஜ் , ரம்யா கிருஷ்ணன் , RJ விக்னேஷ் , அம்ருதா , ரேணுகா மற்றும் பலர் நடிக்கிறார்கள் . இவர்களுடன் முக்கிய வேடத்தில் நவரச நாயகன் கார்த்திக் நடிக்கிறார்.

இப்படம் மூலம் ரஜத் ரவிசங்கர் டைரக்டராக அறிமுகமாகிறார். கதை திரைக்கதை, வசனம் எழுதும் இவர்,”எங்கேயும் எப்போதும்” இயக்குநர் சரவணன் , பிரபல இந்தி இயக்குநர் அனுராக்காஷ்யப், இயக்குநர் R.கண்ணன் இவர்களுடன் இணை இயக்குனராக பணிபுரிந்தவர்.

இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
ஒளிப்பதிவு : R வேல்ராஜ்
எடிட்டிங் : ரூபன்
கலை : ஜெயஸ்ரீநாராயணன்
ஸ்டன்ட் : அன்பறிவ்
பாடல்கள் : கபிலன் , தாமரை , விவேக்
நிர்வாக தயாரிப்பு : K.V.துரை
அஸோஸியேட் தயாரிப்பு : ஜெய் ஜெகவீரன்.

பெயரிடப்படாத ‘கார்த்தி 17’ படத்தை ரிலையன்ஸ் எண்டெர்டைன்மென்ட் வழங்க – பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ். லஷ்மண்குமார் தயாரிக்கிறார் .இவர், சூர்யா நடித்த சூப்பர் ஹிட்டான ‘சிங்கம்2’ படத்தை தயாரித்தவர் .தற்போது விரைவில் வெளியாக இருக்கும் திரிஷா நடிப்பில் R. மாதேஷ் இயக்கத்தில் ‘மோகினி’ படத்தை தயாரித்து வருகிறார்.

‘#கார்த்தி 17’ படத்தின் படபிடிப்பு இம்மாதம் 8ம் தேதி சென்னையில் ஆரம்பமாகிறது. இதை தொடர்ந்து யுரோப் நாட்டில் 15 நாட்களும் , ஹைதராபாத் , மும்பை , இமயமலை பகுதிகளிலும் உருவாகிறது.