மீண்டும் சரித்திர கதையில் நடிக்கும் நயன்தாரா?


தமிழ் திரையுலகில் தொடர்ந்து நம்பர் 1 இடத்தில் இருக்கும் நயன்தாரா வித்தியாசமான கதை, கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளும் குவிகிறது. ஏற்கனவே நயன்தாராவை முதன்மைப்படுத்தி வந்த மாயா, அறம், கோலமாவு கோகிலா உள்ளிட்ட படங்களுக்கு வரவேற்பு கிடைத்தன. ஸ்ரீராமராஜ்ஜியம், சைரா நரசிம்ம ரெட்டி போன்ற புராண சரித்திர கதைகளிலும் நடித்துள்ளார்.

தற்போது கன்னியாகுமரி பகவதி அம்மன் மகிமைகளை சொல்லும் ‘மூக்குத்தி அம்மன்’ பக்தி படத்தில் விரதம் இருந்து நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.

இந்த நிலையில் கன்னடத்தில் தயாராகும் ராஜவீர மடகாரி நாயகா என்ற சரித்திர கதையில் நடிக்க நயன்தாராவிடம் பேசி வருகின்றனர். இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.