தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் கதாநாயகனாக நடிக்கும் “பவர் பாண்டி”!

நடிகராக பல வெற்றி படங்களில் நடித்தது மட்டுமல்லாது தேசிய விருது உள்ளிட்ட இந்தியாவின் மிக முக்கியமான பல்வேறு விருதுகளை வென்ற நடிகர் தனுஷ்க்கு இந்தியாவின் தலைசிறந்த நடிகர் , தயாரிப்பாளர் , பாடலாசிரியர் , பாடகர் என பல்வேறு முகம் உண்டு. இத்தனை புகழுக்கு சொந்தக்காரரான நடிகர் தனுஷ் தற்போது இயக்குநர் தனுஷாக அவதாரம் எடுத்துள்ளார். ஆம் தற்போது இவர் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ் கிரண் கதாநாயகனாக நடிக்கும் “பவர் பாண்டி” என்னும் திரைப்படத்தை எழுதி இயக்குகிறார்.

இப்படத்தில் நடிகர் ராஜ் கிரண், பிரசன்னா , சாயா சிங் ஆகியோர் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு ஆர் .வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய தனுஷ் , கஸ்தூரி ராஜா ஆகியோர் எழுதும் பாடல்களுக்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பிரசன்னா ஜி.கே , கலை ஜெயா சந்திரன் , சண்டை பயிற்சி Stunt சில்வா , நடனம் பாபா பாஸ்கர் , காஸ்டியும் டிசைன் பூர்ணிமா ,தயாரிப்பு மேற்ப்பார்வை எஸ்.பி.சொக்கலிங்கம் , நிர்வாக தயாரிப்பு எஸ்.வினோத்.

பவர் பாண்டி திரைப்படத்தின் மற்ற நடிகர்கள் பற்றிய தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

இப்படத்தின் முதல் கட்ட படபிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் இனிதே துவங்கியது.