கோபப்படுத்துற மாதிரி பங்ஷன் நடத்தகூடாது ; ஜகா வாங்கிய பாலா..?

மழைவெள்ள துயரத்தை சிம்புவின் ‘பீப் சாங்’ மறைத்தது.. பீப்சாங் விவகாரத்தை மறைக்கும் விதமாக தற்போது இளையராஜாவை கேடயமாக்கி வருகிறார்களோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. ‘பீப் சாங்’ பற்றி தன்னிடம் கேள்வி கேட்ட நிருபரை பார்த்து ஒரு வேகத்தில் ‘அறிவு இருக்கா’ என இளையராஜா கேட்டதை பத்திரிக்கையாளர்கள் சீரியஸாக எடுத்துக்கொண்டுள்ளார்களாம்.

இதுதான் இப்போது இயக்குனர் பாலாவிற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாம்.. காரணம் தனது ‘தாரை தப்பட்டை’ படத்தின் இசைவெளியீட்டு விழாவை அது இளையராஜாவின் 1௦௦௦ஆவது படம் என்பதால் இசைஞானிக்கான விழாவாக எடுக்க முடிவுசெய்திருந்தாராம். அதற்காக ஒரு சேனலுடன் பேசியும் வைத்திருந்தாராம். ஆனால் இந்த நேரத்தில் இளையராஜா பேச்சினால் பத்திரிகைகாரர்கள் கோபமாக இருப்பதால் அந்த முடிவை கைவிட்டுவிட்டாராம் இயக்குனர் பாலா..! .