அன்புச்செழியன் விஷயத்தில் பல்டி அடித்த சி.வி.குமார்..!


கந்துவட்டி காரணமாக சசிகுமாரின் உறவினரும், தயாரிப்பு கம்பெனியின் மானேஜருமான அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறிதது பைனான்சியர் அன்புச்செழியனை கைது செய்யுமாறு சசிகுமார் புகார் கொடுத்திருந்தார். விஷால், அமீர் உள்ளிட்ட பலர் கொந்தளித்தனர். ஆனாலும் சசிகுமார் புகார் தவிர வேறு எந்த புகாரும் அன்பு மீது பதிவு செய்யப்படவில்லை

இந்த நிலையில் ‘மாயவன்’ திரைப்படத்தை இயக்கி, தயாரித்த சி.வி.குமார், அன்புச்செழியன் மீது கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் கொடுத்த புகாரை திடீரென நேற்று வாபஸ் பெற்றுள்ளது அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது..

தன்னுடைய மாயவன்’ படத்தை வெளியிட தடையில்லா சான்றிதழை அன்புச்செல்வன் தரப்பு வழங்கிவிட்டதாகவும், தன்னுடைய நிதி ஆவணங்களையும் கோபுரம் பிலிம்ஸ் வழக்கறிஞர்கள் ஒப்படைத்து விட்டதாகவும், இதன் காரணமாக தான் அன்புச்செழியன் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் இதன் பின்னணியில் வில்லங்கமான பழைய டீல் ஒன்று இருப்பதாகவும், அன்பு மீது வழக்கை வாபஸ் வாங்கா விட்டால், சி.வி.குமார் வேறுவிதமாக மோசடி வழக்கு சிக்கலில் மாட்டவேண்டி வரும் என்பதால் தான் வழக்கை வாபஸ் வாங்கிவிட்டாராம்.