அளவுக்கதிகமாக பெப்சி குடித்தே பரிதாபமாக உயிரை விட்ட இயக்குனர்..!


பிரபல மலையாள இயக்குனர் ‘ட்ராபிக்’ புகழ் ராஜேஷ் பிள்ளை நேற்று மரணமடைந்தது மலையாள திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவரது மரணத்துக்கு ஒருவகையில் காரணமாக அமைந்தது பெப்சி குளிர்பானம் தான் என தெரியவந்துள்ளது.. கேட்கவே ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா..? ஆனால் அதுதான் உண்மை என சொல்லப்படுகிறது.

41 வயதே ஆன ராஜேஷ் பிள்ளை, நீண்ட நாட்களாக கல்லீரல் பாதிப்பால் சில வருடங்களாகவே அவதிப்பட்டு வந்துள்ளார். இதுபற்றி ராஜேஷ் பிள்ளையின் நண்பர் ஒரு தனது பேஸ்புக் பக்கத்தில் விரிவாக எழுதியுள்ளார். ராஜேஷுக்கு சிகரெட், ட்ரிங்க்ஸ் என எந்த கெட்ட பழக்கமும் கிடையாது.. ஆனால் ஒருநாளைக்கு முப்பது முறையாவது பெப்சி குளிர்பானத்தை தொடர்ந்து குடிப்பாராம்.

இப்படி சிகிச்சைக்காக முன்பு ஒருமுறை மருத்துவமனை சென்றபோது, அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் அதிகமாக குடித்த அந்த குளிர்பானமும் ஜங் புட்டும் (பாக்கெட் உணவுகள்) தான் கல்லீரல் பிரச்சனைக்கு காரணம் என்றும் கூறினாராம்.

கெட்ட பழக்கம் இல்லைனாலும் சாவு எப்படியெல்லாம் வருது பாருங்க..