“நயன்தாராவுக்கு தருவீங்க.. எனக்கு தரமாட்டீங்களா..?” ; அடம்பிடித்த அஞ்சலி..!


காண்பது பொய்’ என்கிற பேய்ப்படம் ஒன்று தயாராகி வருகிறது. இதில் காண்பதெல்லாம் மெய் தான் என்கிற மாதிரி அதிர்ச்சி நிகழ்வுகளை அரங்கேற்றி உள்ளாராம் அஞ்சலி. இந்தப்படத்திற்காக முதலில் நயன்தாராவிடம் தான் பேசினார்களாம். ஆனால் அவரது சம்பளத்தை கேட்டு, அதில் இன்னும் இரண்டு படங்களை எடுத்து விடலாம் என அப்படியே அஞ்சலை பக்கம் திரும்பி விட்டார்களாம்..

முதல்கட்ட படப்பிடிப்பு வரை எல்லாம் நன்றாகத்தான் நடந்துகொண்டு இருந்தது.. ஆனால் அதன்பின்னர்தான் அஞ்சலையின் ஆட்டம் ஆரம்பமானதாக சொல்கிறார்கள்.. சமீபத்தில் ஊட்டியில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது, குளிர் பிரதேசம் என்பதால் கேரவன் ஏற்பாடு செய்யாமல் விட்டு விட்டார்களாம்..

இதை அறிந்த அஞ்சலி, “இதுவே, நயன்தாரான்னா கேரவன் ரெடி பண்ணுவீங்க.. எனக்கு மட்டும் தரமாட்டீங்க.. அப்படித்தானே” என சண்டைபோட்டு ஷூட்டிங் வர மறுத்து ஹோட்டலிலேயே கதவை சாத்திக்கொண்டாராம். அப்புறம் எப்படியோ புரடக்சன் மேனேஜர் தேடிப்பிடித்து கேரவன் ஏற்பாடு செய்ய, அதன்பின் தான் படப்பிடிப்பிற்கு வந்தாராம் அஞ்சலி..

எத்தனை வருடங்கள் ஆனாலும் நம் தமிழ் சினிமாவில் நடிகைகளும் இந்த கேரவன் அடிதடியும் பிரிக்கவே முடியாது போல இருக்கே..!