“ஒரு ரிப்போர்ட்டர் சுமத்தினார்.. நான் இன்னும் சுமக்கிறேன்” ; பார்வதி வருத்தம்..!


மலையாள நடிகை பார்வதி கூப்பாடு போடாத குறையாக பலமுறை அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டார், தான் வெறும் பார்வதி தான்.. பார்வதி மேனன் இல்லை என்று.. தயவுசெய்து ஜாதி பெயரை பெயருக்கு பின்னால் சேர்த்து குறிப்பிட வேண்டாம் என வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சொல்லிவருகிறார்.. அப்படியானால் ஏன் ஆரம்பத்தில் பார்வதி மேனன் என பெயரை வெளிப்படுத்தினாராம்..?

“நல்ல கதையா இருக்கே.. நான் நடிக்க வந்த புதிதில் (பூ பட நேரத்தில்) ஒரு நிருபரிடம் பேசியபோது பார்வதி என என் பெயரை சொன்னேன்.. அதற்கு ஏற்கனவே மலையாளத்தில் ஒரு பார்வதி இருக்கிறாரே (ஜெயராம் மனைவி) என கூறிய அவர் பேச்சு வாக்கில் நீங்கள் மேனனா, நாயரா என என்னிடம் போட்டு வாங்கினார்.. அப்போது நான் சொன்ன பதிலை வைத்து பார்வதி மேனன் என எழுதினார். அப்போதிருந்து மற்றவர்களும் அப்படியே குறிப்பிடுகிறார்கள்.. கிட்டத்தட்ட பத்து வருடங்களாக அதை என் மேல் சுமத்தி விட்டார்கள்.. இன்னும் நான் அதை தேவையில்லாமல் சுமக்கிறேன்” என்கிறார் பார்வதி வருத்தத்துடன்.