ராதிகா சரத்குமாரின் புதிய அவதாரம் !


தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முழுக்க பெண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் ‘கோடீஸ்வரி’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

‘கிழக்கே போகும் ரயில்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானவர் ராதிகா.

அதற்குப் பிறகு ரஜினி, கமல் ஆகியோருடன் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்தார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளையும் சேர்த்து இதுவரை 300-க்கும் அதிகமான படங்களில் ராதிகா நடித்துள்ளார்.

சின்னத்திரையில் வெளியான நாடகம் மூலம் பலரது இல்லத்தில் ஒருவராக மாறினார். குறிப்பாக சித்தி நாடகத்தின் மூலம் அனைவரது இல்லங்களிலும் ஒருவராக மாறினார்.

மேலும் படத் தயாரிப்பு, டிவி நிகழ்ச்சிகளில் நடுவர் என அனைத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
தற்போது இவரது ‘மார்க்கெட் ராஜா MBBS’ படம் உருவாகி ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள “கோடீஸ்வரி” என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார் ராதிகா.