அஞ்சலியை வழிக்கு கொண்டுவந்த சித்தி..!


அஞ்சலிக்கு முன்பைவிட இப்போது வாய்ப்புகள் குறைந்துவிட்டது என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை.. எதனால் தனது சித்தியுடன் கோபித்துக்கொண்டு வெளியேறிப்போனாரோ, அந்த காரியங்கல் எல்லாம் சரிவர நடக்காத வருத்தத்தில் இருக்கிறார் அஞ்சலி.. என்னதான் சுதந்திரம் என்றாலும் கடிவாளம் இல்லாத குதிரை எங்கேயாவது முட்டிக்கொண்டு விழும் நிலையில் தான் அஞ்சலி இருக்கிறார்..

இந்தநிலையில் அஞ்சலிக்கு ஷாக் அடிக்கும் விதமாக ஒரு குண்டை தூக்கிப்போட்டுள்ளாராம் சித்தி.. தெலுங்கு சேனல் ஒன்றில் பேசும்போது விரைவில் ‘ஒரு நடிகையின் கதை’ பற்றிய புத்தகம் ஒன்றை எழுதப்போவதாக கூறியுள்ளார் சித்தி.. அவ்வளவுதான் இது அஞ்சலியின் காதுகளுக்கு வந்ததும் வெலவெலத்துவிட்டார் அஞ்சலி.. இதனால் இனிமேல் சமாதானமாக போய்விடலாம் என சித்திக்கு தூதுவிட்டிருக்கிராராம் அஞ்சலி.