பைரவா நட்டத்தால் கேரளாவில் ‘மெர்சல்’ வெளியாவதில் சிக்கல்…!


சண்டக்கோழி’ படத்தில் ‘எங்கேயோ மிச்சம் வச்சுட்டு வந்திருக்கான்’ என விஷாலை பார்த்து ராஜ்கிரண் சொல்வார்.. அந்தமாதிரி கேரளாவில் விஜய் வைத்து விட்டு வந்த மிச்சம் தான் இப்போது அவரது புதிய படமான ‘மெர்சல்’ ரிலீசுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது…

ஆம்.. கடந்த முறை ‘பிறவா’ படத்தை வாங்கி கேரளாவில் வெளியிட்டு நட்டமடைந்த விநியோகஸ்தர்களில் சிலர், அந்த நட்டத்தை ஈடு கட்டினால் தான் ‘மெர்சல்’ படஹ்தை ரிலீஸ் செய்யவிடுவோம் என போர்க்கொடி தூக்கியுள்ளனர்.. இந்தப்பிரச்சனையை சமாளித்தால் மட்டுமே சொன்ன தேதியில் கேரளாவில் ‘மெர்சல்’ ரிலீசாகும் என்றே தெரிகிறது.