நண்பருக்கே உதவாத சந்தானம்!!!!

ஒரு விழாவிற்கு வந்து அங்கு செலவழியும் நேரத்தை, ஏதேனும் படத்திற்கு கால்ஷீட் கொடுத்து, அந்த அரை நாளில் கூட, தன் பாக்கெட்டை நிரப்புவதில் கவனம் செலுத்துவாராம் சந்தானம்.

இன்னும் சில தினங்களில் நடைபெறவிருக்கும் ‘நண்பேன்டா’ படத்தின் பாடல் வெளியீட்டுக்கு சந்தானம் வருவாரா? இதுதான் பெரும்பான்மை நிருபர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. காரணம் படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் ஆச்சே. பொதுவாகவே ரெண்டு பேரும் நிஜத்திலும் நண்பேன்டாதான். அப்படியென்றால் இந்த பாடல் வெளியீட்டு விழாவுக்கு அவர் வருவதுதானே முறை?..ஆனால் அதற்கும் தன்னால் வர இயலாது, ரொம்ப பிஸி என்று சொல்லிவிட்டாராம். இது அந்த படத்தின் குழுவிற்கு எந்த வித ஆச்சர்யத்தையும் அளிக்கவில்லை, ஏனென்றால் டப்பிங்கிற்கு அழைத்தால் கூட ஷூட்டிங் இருக்கிறது என்று கூறி விடுவாராம்.

தற்போது, தான் ஹீரோவாக நடிக்கும் படத்தின் ஷூட்டிங் பாண்டிச்சேரியில் நடந்துக்கொண்டிருப்பதால் தன்னால் டப்பிங்கிற்கு வர இயலாது என்று கூறிய சந்தானமிடம், “நீங்க சென்னை வர வேண்டாம் செட்டப்பை பாண்டிச்சேரி அனுப்புறோம் பேசிக்கொடுங்க என்றாராம்” உதயநிதி.
தன் நெருங்கிய நண்பருக்கே உதவாத பேருடயவறாகத்தான் திகழ்கிறார் சந்தானம். இருந்தாலும் தனது பாக்கெட்டை கழற்றி வைத்துவிட்டு நண்பேண்டா இசை வெளியீட்டு விழாவிற்கு வருவதாக இருக்கின்றார் நம் பிஸி நாயகன்.