மூழ்கிய மீகாமனை காப்பாற்றிய ஆர்யா!!!!

மதுரையில் பிரமுகர் ஒருவர் 6 கோடி ரூபாய் கொடுத்தால் தான் “மீகாமன்” படம் வெளிவரும் என்று தடுப்பதாக வந்த தகவலின் படி, நடிகர் ஆர்யா தனது 3 கோடி ரூபாயையும் தந்து மேலும் தனது சொந்த பணம் 3 கொடியையும் தந்தாராம். இவ்வளவு நாட்களாக எங்கே இருந்தார் இவர்?

சம்பளத்தை மொத்தமாக தந்தால் தான் திரைப்படம் வெளியாகும் என்று கூறும் நம் கோலிவுட் நடிகர்கள் மத்தியில், தயாரிப்பாளர்களின் கஷ்டத்தை புரிந்து கொண்டு உதவும் நடிகர்களும் உள்ளனர்.

படகு தண்ணீரில் மூழ்குவதை வேடிக்கை பார்க்கும் ஹீரோக்களே இவரை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு வேளை தயாரிப்பாளர் ஆனதால் கஷ்டம் தெரிந்ததோ?