பரபரப்பிற்காக தானே செய்தி கொளுத்திப் போட்டாரா விஜய்..?


இயக்குனர் ஏ.எல்.விஜய் தொடர்ந்து தேவி-2, வாட்ச்மேன் ஆகிய படங்களை இயக்கி அடுத்தடுத்து வெளியிட இருக்கிறார். இந்த நிலையில் அவருக்கும் நடிகை சாய்பல்லவிக்கும் இடையே காதல் மலர்ந்து இருப்பதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்றும் ஒரு செய்தி பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை என்று விஜய் தரப்பு மறுக்கிறது.

ஏற்கனவே ஒரு நடிகையை திருமணம் செய்துகொண்டு மனரீதியாக கஷ்டப்பட்டு, பொதுவாழ்க்கையில் அவமானப்பட்டது போதும் என நினைக்கும் இயக்குனர் விஜய் நிச்சயமாக இன்னொரு நடிகையை திருமணம் செய்துகொள்ள மாட்டார் என்று அவரது தரப்பில் சொல்லப்படுகிறது. அப்படியானால் அடுத்தடுத்து அவரது படங்கள் வெளியாக இருக்கும் நிலையில் இப்படி செய்தி பரப்புவது படத்தின் பப்ளிசிட்டிக்காக இயக்குனர் விஜய்யே கசியவிட்ட வதந்தியா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.