சுற்றி வளைத்த போலீஸ் ; பணிந்தார் அமலாபால்..!


பாண்டிச்சேரியில் போலியான முகவரி கொடுத்து சொகுசு கார் வாங்கியதில் பல லட்சம் ரூபாய் வரி ஏய்ப்பு செய்தார் அமலாபால். இதுகுறித்து அமலாபாலுக்கு போலீஸார் சம்மன் அனுப்பி இருந்தனர். இதேபோல குற்றம் சாட்டப்பட்ட நடிகர்கள் சுரேஷ்கோபியும் பஹத் பாசிலும் சம்மனுக்கு மரியாதை தரும் விதமாக போலீசில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.

ஆனால் அமலாபாலோ போலீஸார் முன்பு ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்து வந்தார். மேலும் தான் கைதாவதை தடுக்க முன் ஜாமீனும் வாங்கி வைத்துக்கொண்டு போலீஸுக்கு போக்கு காட்டினார். ஆனால் போலீஸார் அவர் மீதான பிடியை தீவிரப்படுத்தவே வேறு வழியின்றி போலீஸ் முன் ஆஜராகி தனது பதிலை அளித்துள்ளார் அமலாபால்.

இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் சுமார் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.