விஜய்சேதுபதி படம் அதர்வாவுக்கு கைமாறியது எப்படி..?


விஜய்சேதுபதி நல்ல நல்ல படங்களை தேர்ந்தெடுத்து பண்ணுகிறார் என்பது அவர் நடிப்பில் வெளியாகி வரிசையாக வெற்றிபெறும் படங்களை பார்க்கும்போதே தெரிகிறது.. ஆனால் அவர் தனக்கு செட்டாகாத, அதேசமயம் நல்ல கதைகளாக இருந்தால் மற்ற நடிகர்களுக்கும் அந்த கதையை சிபாரிசு செய்கிறார் என்பது பலருக்கும் தெரியாது..

அப்படி விஜய்சேதுபதியை தேடி வந்த கதைதான் ரவி அரசு இயக்கத்தில் வெளியான ‘ஈட்டி’ படம்.. ஆனால் தனது உடல்வாகிற்கு விளையாட்டு சம்பந்தமான கதை பொருத்தமாக இருக்காது என நினைத்த விஜய்சேதுபதி, இந்தக்கதை அதர்வாவுக்கு செட்டாகும் என கூறி இயக்குனரை அதர்வாவிடம் அனுப்பி வைத்தாராம். அதர்வா இதை தயாரிப்பாளர் டி.சிவாவிடம் பெருமையாக கூற, அவர் விஜய்சேதுபதியின் பெருந்தன்மையை உலகறிய செய்துவிட்டார்.