மன்னித்து விடுங்கள் ; வாயை விட்டு வம்பில் சிக்கி கதறிய கஸ்தூரி


அரசியல், சமூக மற்றும் சினிமாநிகழ்வுகளில் நடிகை கஸ்தூரி பரபரப்பான கருத்துக்களை கூறி தன்னை லைம் லைட்டில் வைத்துக் கொண்டிருப்பவர். அப்படி அவர் திருநங்கைகளை மையப்படுத்தி ஒரு கருத்தை சொல்லி சிக்கலில் மாட்டியிருக்கிறார். 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் ஒரு நீதிபதி சரி என்றும் ஒரு நீதிபதி தவறு என்றும் தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பை கஸ்தூரி திருநங்கைகளோடு ஒப்பிட்டு விமர்சித்ததோடு. திருநங்கைகள் படத்தையும் வெளியிட்டார்.

இது கடும் எதிர்ப்பை சம்பாதித்தது. திருநங்கைகள் பொங்கி எழுந்து கஸ்தூரி வீட்டு முன் துடைப்பத்துடன் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். இது தொடர்பாக மதுரை போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் ஏற்கெனவே தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டு அதை நீக்கவும் செய்த கஸ்தூரி இப்போது மீண்டும் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

நான் வேடிக்கையாக பேசுவதாக நினைத்து தவறான கருத்தை பதிவு செய்து விட்டேன். அதனால் நான் மிகவும் மதிக்கும் நண்பர்கள் சகோதர, சகோதரிகளின் மனது வேதனைப்படுகிறது என்பதை அறிந்த உடனேயே அதை நீக்கி விட்டேன். அந்த கருத்துக்காக பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டு விட்டேன். ஆனால் நீக்கப்பட்ட பதிவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து பரப்புகிறார்கள். நானும் மனுஷி தான். தவறு செய்யாமல் யாரும் இருக்க மாட்டார்கள். மறுபடியும் நான் தவறு செய்யவும் வாய்ப்பிருக்கிறது. அப்போது என்னை கண்டியுங்கள்” என கண்ணீர் வடித்துள்ளார் கஸ்தூரி