தமிழ்சினிமாவின் முதல் சூப்பர்ஸ்டாரை மறந்தனர் இரண்டு அணியினரும்..!

தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் தான் எம்.கே.தியாகராஜ பாகவதர். ஏழிசை மன்னர் என பாராட்டப்பட்ட அவர், தனது வசீகர முகத்தாலும், காந்த குரலாலும் ரசிகர்களை கவர்ந்தவர். பணமிருந்தபோது அள்ளிக் கொடுத்த தியாகராஜ பாகவதர், கடைசிக் காலத்தில் வறுமையில் சிக்கி, நோயால் இறந்தார். அவரது 56-வது நினைவுநாள் நவ-1ல் திருச்சியில் அனுசரிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் அவரது உறவினர்கள் சிலரும், அவர் சார்ந்த சமூகத்தினர் சிலரும் அஞ்சலி செலுத்தினார்களே தவிர, திரைப்பட, நாடக நடிகர்கள் சார்பில் ஒருவர்கூட மதியம் வரை அஞ்சலி செலுத்த வரவில்லை.. மாலையில் தேர்தல் வெற்றிக்காக நன்றிசொல்ல வந்த கருணாஸ், பூச்சி முருகன் இருவருக்கும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்ட பதறிப்போய் உடனே அந்த இடத்திற்கு சென்று தங்களது அஞ்சலியை செலுத்தினார்களாம்.