மலேசியாவில் இருந்துகொண்டே ஆள் வைத்து வைத்து அடித்தாரா ‘புலி’யான தயாரிப்பாளர்?!

சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்கும் கபாலி படத்தின் பட்டப்படிப்பை கவனிப்பதற்காக அதன் தயாரிப்பாளரான கலைப்புலி தாணுவும் அங்கேயே முகாமிட்டு இருக்கிறார். இந்நிலையில், இங்கே தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கூட்டுறவு வீட்டுவசதி வாரியச் சங்கத்தில். தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீடு அடிப்படையில் வெற்றி பெற்று இயக்குனராக பதவி வகித்து வரும் தீத்தமலை என்பவர் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு மீது பரபரப்பு தாக்குதல் புகார் கொடுத்துள்ளார்.

அதாவது கடந்த புதன்கிழமை (நவ-28) காலை 8.10 மணியளவில் மலேசியாவில் கபாலி படப்பிடிப்பிலிருந்து கலைப்புலி தாணு இவருடைய தொலைபேசிக்கு தொடர்புகொண்டு காலை 11.00 மணிக்கு தயாரிப்பாளர் சங்கத்தில் மேற்கண்ட வீட்டுவசதி சங்கத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது என்றும் இவரைப்போய் அதில் அவசியம் கலந்துகொள்ள வேண்டும் என்று சொன்னாராம்

ஆனால் அங்கிருந்த சிவகுமார் என்பவர் இவரது ஜாதி பெயரைச்சொல்லி என்னை ரொம்ப அசிங்கமாகவும், மிக கேவலமாகவும் பேசி அடித்து உதைத்தாராம்.. மேலும் “தாணு, நடிகர் பாபு கணேஷ் ஆகியோர் சொல்லித்தான் உன்னை அடிக்கிறேன். உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள். இனிமேல் இந்த சங்கத்திற்குள் பார்த்தால் உன்னை உயிரோடு விடமாட்டேன்” எனவும் இவருக்கு மிரட்டல் விடுத்தாராம்.

இதனால் பாதிக்கப்பட்ட தீர்த்தமலை, தாணு உள்ளிட்ட இந்த நால்வர்மீது தாழ்த்தப்பட்டவர்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மேலும் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்புவேண்டும் எனவும் அவர்கள் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்துவிட்டு வந்துள்ளாராம்.