“படுக்கைக்கு அழைக்கும் விவகாரத்தில் தயாரிப்பாளர் மட்டுமே காரணம் அல்ல” ; பிரபல பெண் தயாரிப்பாளர் விளாசல்..!


சமீபகாலமாக பத்திரிக்கைகளில் அதிகம் பேசப்பட்டு வருவது நடிகைகள் மீது தயாரிப்பாளர்கள் செக்ஸ் டார்ச்சர் செய்கிறார்கள் என்ற செய்திதான். எந்த மொழி சினிமாவாக இருந்தாலும் பாலியல் தொல்லைகள் தற்போது வரை இருந்து கொண்டே வருகிறது.

தற்போது நடிகைகள் வெளிப்படையாகவே தங்களை தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைப்பதாக கூறுகிறார்கள். அவர்கள் போலீசில் புகாரும் அளித்து வருகின்றனார். இந்த நிலையில் பாலிவுட் பெண் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் இது குறித்து நேர்மையான கருத்து ஒன்றை கோரியுள்ளார்.

அவர் கூறுகையில், ‘‘சில தயாரிப்பாளர்கள் நடிகைகளிடம் தவறாக நடந்து கொள்கிறார்கள் என்று சொல்வது ஒரு புறம் இருந்தாலும், சில நடிகைகள் வேண்டும்மென்றே தயாரிப்பாளர்களுடன் நெருக்கமாக படுக்கையை பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு பழங்கி வருகிறார்கள். பின்னர் அந்த தயாரிப்பாளர் படத்தில் அந்த நாயகிக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால் உடனே அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறுகிறார்கள்.

இந்த பிரச்சனைக்கு தயாரிப்பாளர் மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியாது. இந்த சம்பவத்தில் நடிகைகளுக்கும் பங்கு உள்ளது’’ என்கிறார் பெண் தயாரிப்பாளர் ஏக்தா கபூர்.