லிங்குசாமியை கிண்டலடித்த ‘ரஜினி முருகன்’ இயக்குனர்..!

“சிங்கம் படுத்துக்கிச்சுன்னா எலி ஏறி மிதிக்குமாம்” என ஒரு பழமொழி சொல்வார்கள்.. அது இப்போது லிங்குசாமியின் விஷயத்தில் உண்மையாகி வருவது தெளிவாக தெரிகிறது.. இல்லையென்றால் ஒரே ஒரு ஹிட் படம் கொடுத்த பொன்ராம் மாதிரி ஆட்களெல்லாம் கிண்டல் பண்ணும் நிலை லிங்குசாமிக்கு வந்திருக்குமா என்ன..?

ஆரம்பத்தில் ஒவ்வொரு படமாக தயாரித்து ரிலீஸ் செய்துவந்த லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ், பின்னர் வெளிப்படங்களை வாங்கி வெளியிடவும் செய்ததது. இரண்டிலும் ஓரளவுக்கு வருமானம் வரவே, ஒரே நேரத்தில் இரண்டு படம், மூன்று படம் தயாரிக்கும் வேலையை ஆரம்பித்தபோது தான் சிக்கலும் ஆரம்பித்தது..

‘அஞ்சான்’ படம் தயாரிப்பில் இருக்கும்போதே ஒரு பக்கம் உத்தம் வில்லன் படத்தையும் இன்னொரு பக்கம் ‘இடம் பொருள் ஏவல்’ படத்தையும் தயாரிக்கும் வேலைகளில் இறங்கியது திருப்பதி பிரதர்ஸ்.. அதுமட்டுமா இன்னொரு பக்கம் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயனை வைத்து ‘ரஜினி முருகன்’ படத்தையும் ஆரம்பித்தார்கள்..

இங்கேதான் கொஞ்சம் நிதானம் காட்ட தவறிவிட்டார் லிங்குசாமி. எல்லா நேரமும் ஒரேபோல இருக்காது அல்லவா..? ‘உத்தமவில்லன்’ படத்தை ரிலீஸ் பண்ணுவதற்குள்ளாகவே, பழைய கடன் பாக்கிகள் நெருக்கடி கொடுத்து அவரை நாக்கு தள்ளவைத்து விட்டது.

இப்போது ரஜினி முருகன் படமும் பலமுறை ரிலீஸ் தேதி குறிக்கப்பட்டு அதே கடன் பிரச்சனைகளால் ரிலீசாக முடியாமல் தள்ளிப்போய்க்கொண்டு இருக்கிறது.. இதுமட்டுமல்லாமல், இன்னும் ‘இடம் பொருள் ஏவல்’ படம் வேறு முடிந்த நிலையில் பிசினஸ் ஆகாமல் இருக்கிறது..

சரி.. இது லிங்குசாமியின் பிரச்சனை.. ஆனால் என்னக்கென்ன வந்தது என்கிற ரீதியில், தான் இயக்கிய படம் ரிலீசாகாமல் இருப்பதால் தனது அடுத்த படத்தை தொடங்கும் வேலை தடைபட்டு கொண்டிருக்கிறதே என டென்ஷன் ஆன இயக்குனர் பொன்ராம் சமீபத்தில் லிங்குசாமியின் நிலை பற்றி கிண்டலாக ட்வீட் பண்ணியது தான் திருப்பதி பிரதர்சை காயப்படுத்தி உள்ளது..

அப்படி என்ன ட்வீட் பண்ணினாராம் பொன்ராம்.. “என்னதான் திருப்பதி உண்டியலில் வண்டி வண்டியாக பணத்தை கொட்டினாலும் கடனை அடைக்க முடியவில்லையே….” என தற்போது திருப்தி பிரதர்ஸ் கடனில் சிக்கி படத்தை வெளியிட முடியாமல் இருப்பது குறித்து கிண்டலடித்துள்ளார்..

இதைத்தான் சொல்வார்கள்.. சிங்கம் படுத்துக்கிச்சுன்னா….