எமி ஜாக்சனுக்கு ஆப்பு வைத்த ஷங்கர் பட சென்டிமென்ட்..!


எமி ஜாக்சன் மதராச பட்டணம் படத்தில் அறிமுகமானபோது ஒரு நல்ல நடிகை என்கிற அளவில் தான் பார்க்கப்பட்டார்.. ஆனால் ஷங்கரின் ‘ஐ’ படத்தில் நடிக்க ஆரம்பித்ததும் அவர் ஏதோ தமிழ் சினிமாவையே ஆளவந்தவர் என்கிற ரேஞ்சுக்கு பில்டப் ஏற்றினார்கள்..

அதை தொடர்ந்து மீண்டும் ஷங்கர் படத்தில் அதுவும் ரஜினியுடன் நடிக்கிறார் என்றதுமே தன்னை ராணியாகவே நினைத்துக்கொண்டார் எமி ஜாக்சன். ஆனால் அது வருக்கு தானே தேடிக்கொண்ட ஆப்பாக அமைந்துவிட்டது.

பொதுவாக ஷங்கரின் படத்தில் நடித்த நாயகிகள் அதற்கடுத்து வரும் நாட்களில் படம் எதுவும் கிடைக்காமல் பீல்டு அவுட் ஆகிவிடுவார்கள். இதற்கு சதா, ஸ்ரேயா, இலியானா என பல முன்னுதாரணங்கள் இருக்கின்றன. அதை மெய்ப்பிப்பது போல தற்போது, 2.O தவிர வேறு எந்தப்படமும் எமி ஜாக்சன் கைவசம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.