“தவறுகளை திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது” ; சூர்யா ஓபன் டாக்..!


நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் மூலமாக யாதும் ஊரே என்ற தலைப்பில் இரண்டு நாள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சமீபத்தில் சென்னையில் பெய்த மழை மற்றும் வெள்ளத்தின்போது மக்களுக்கு உதவிய தனி நபர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்துள்ளார்.

இந்த மாநாட்டில் பேசிய சூர்யா, “நாம் வாழ எதையும் செய்ய துணிந்துவிட்டோம். இப்போது ஏரிகளின் பெயர்தான் இருக்கிறது. ஏரியும் இல்லை, நீரும் இல்லை. இயற்கை என்பது ஒரு சங்கிலி தொடர். ஒன்றை சார்ந்துதான் ஒன்று இங்கு வாழ முடியும் சமீபத்திய பெருமழை நம்மிடையே நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இயற்கைக்கு எதிராக நாம் செய்த தவறுகளை திருத்திக் கொள்ள சரியான தருணம்” என கூறியுள்ளார்.