டைட்டில் சண்டையில் சிவகார்த்திகேயன் விஜய் தேவரகொண்டா படங்கள்


பொதுவாக தமிழ் சினிமாவில் ஒரு படத்தின் தலைப்பை வெளியிடும்போது ஒரு சிலர் தாங்கள் ஏற்கனவே இந்த தலைப்பை பதிவு வைத்துள்ளோம் அதனால் இந்த தலைப்பு எங்களுக்கே சொந்தம் மற்றவர்கள் அதை பயன்படுத்தக் கூடாது என போர்க்கொடி தூக்குவார்கள்.. இது அவ்வப்போது நடந்து வருவது தான்..

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள புதிய படமும் அப்படி ஒரு பிரச்சினையை சந்தித்துள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் இரும்புத்திரை இயக்குனர் மித்திரன் இயக்கும் புதிய படத்திற்கு ஹீரோ என பெயர் வைக்கப்பட்டு பூஜை போடப்பட்டு உள்ளது. இந்த நாளில் அறிமுக இயக்குனர் ஆனந்த் அண்ணாமலை என்பவர் விஜய் தேவரகொண்டவை வைத்து மும்மொழிகளில் இயக்கும் படத்திற்கு அன்றைய தினமே ஹீரோ என தலைப்பு வைத்து அவர்களும் ஒரு பூஜையை போட்டுள்ளனர்.

இப்படி ஒரேநேரத்தில் இன்னொருவரும் இப்படி தலைப்பு வைப்பது பார்க்கும்போது இது ஏட்டிக்கு போட்டியாக வைத்துள்ளார்கள் என்று நன்றாகவே தெரிகிறது இதுகுறித்து விசாரித்தால் சிவகார்த்திகேயன் படத்திற்கு இந்த தலைப்பை வைத்துக் கொள்ளுமாறு தயாரிப்பாளர் சங்கம் அதிகாரப் பூர்வமாக அனுமதி வழங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது.

அதேசமயம் விஜய் தேவரகொண்டா படத்தின் இயக்குனர் இந்தப்படத்தின் தலைப்புக்கு விண்ணப்பித்து மட்டுமே உள்ளார் என்றும் அவருக்கு இந்த டைட்டில் வழங்கப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது. ஆனாலும் அவர் இந்த டைட்டிலை கைப்பற்றிய தீருவேன் என விடாப்பிடியாக இருக்கிறார் இருந்தாலும், சிவகார்த்திகேயன் படத்திற்கு தான் இந்த டைட்டில் சொந்தமாகும் என்கிறார்கள்