சாந்தனுவை டார்ச்சர் பண்ணிய ட்ராபிக் போலீஸ்..!


பாக்யராஜின் மகன் நடிகர் சாந்தனு எந்த வம்பு தும்புவுக்கும் செல்பவர் அல்ல.. தானுண்டு தன் வேலையுண்டு என இருப்பவர். ஆனால் நேற்று முன் தினம் இரவு ட்ராபிக் போலீஸார் ஒருவரிடம் சிக்கி மன உளைச்சலுக்கு ஆளாவோம் என அவர் நினைத்து பார்த்திருப்பாரா என்ன..? அதுவும் அவரது வீட்டருகிலேயே.

ஆம்.. நேற்று முன் தினம் நாளிரவு இரண்டுமணிக்கு மேல் வரும் அவரது மனைவியும் காரில்வந்துகொண்டு இருந்தார்களாம். காரை ட்ரைவர் தான் ஓட்டி வந்துள்ளார். அப்போது சாந்தனுவின் வீட்டு அமைந்திருக்கும் நுங்கம்பாக்கம் பகுதியில் நள்ளிரவு வாகன சோதனையில் குடிபோதையில் இருந்த ட்ராபிக் போலீஸ் அதிகாரி, சோதனை என்கிற பெயரில் சாந்தனுவின் வண்டியை நிறுத்தி, அவரிடம் தரக்குறைவான வார்த்திகளில் சாந்தனுவை திட்டினாராம்.

பிரச்சனையை பெரிதாக்க வேண்டம் என சாந்தனுவும் தர்க்கத்தில் ஈடுபடாமல் பேசாமல் வந்துவிட்டார்.. ஆனால் இதுபற்றி தனது ட்விட்டரில் வருத்தத்துடன் இதனை பதிவிட்டுள்ளார். அனேகமாக அந்த ட்ராபிக் போலீஸ் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றே தெரிகிறது.