சிரஞ்சீவிக்கு சிக்கலை இழுத்துவிட்ட விஜய்..?


சிரஞ்சீவி நடிக்கும் அவரது 150வது படம் விஜய் நடித்த கத்தி’ படத்தின் ரீமேக் தான் என்பது நமக்கு தெரிந்தது தான்.. ஆனால் இந்த கத்தி’ இங்கே வெளியானபோது இந்தப்படத்தின் கதை என்னுடையது என மீஞ்சூர் கோபி என்பவர் வழக்கு போட்டார்.. அப்புறம் வாபஸ் வாங்கிவிட்டார்.

அதேபோல ஆந்திராவை சேர்ந்த நரசிம்மராவ் என்பவர் அந்த கதை என்னுடையது தான் என்றும் நண்பன் படத்தில் உதவி இயக்குனராக வேலைபார்த்தபோது விஜய்யிடம் இந்த கதையை கூறியதாகவும் விஜய் தனக்கு எதுவும் பதில் சொல்லாத நிலையில் அதுதான் பின்னாளில் முருகதாஸ் இயக்கத்தில் ‘கத்தி’யாக வெளியானது என்றும் புகார் கூறியிருந்தார்.

இப்போது தெலுங்கில் சிரஞ்சீவியை வைத்து அதே கதை படமாக இருப்பதால், தான் ஏற்கனவே தெலுங்கில் இந்த கதையை பதிந்து வைத்துள்ளதாக கூறி வழக்கு தொடுக்கும் முடிவில் உள்ளாராம்… தேவையில்லாமல் விஜய் இந்த கதையை முருகதாஸிடம் சொல்லி படமாக்கப்போக, இப்போது அது சிரஞ்சீவிக்கு சிக்கலை இழுத்துவிட்டு விடும்போல தெரிகிறதே என உதவி இயக்குனர்கள் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.