8 முறை சுந்தர்.சியை நிராகரித்து அவரை அதிர்ஷ்டசாலி ஆக்கிய விஜய்


ரஜினி, கமல், அஜித், சிம்பு உள்ளிட்ட தமிழ் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகர்கள் பல பேருடனும் இணைந்து பணியாற்றி இருக்கிறார் இயக்குநர் சுந்தர்.சி. மினிமம் கியாரண்டி ஹிட் கொடுக்க கூடிய கமர்ஷியல் இயக்குனர்..

அவருடன், அவருக்கு பின்னால் வந்தவர்கள் எல்லாம் என்னா ஆனார்கள் என தெரியாத நிலையில் இன்னும் அதே கெத்துடன் ஸ்டெடியாக நிற்பவர் சுந்தர்.சி.. அவருக்கு, நடிகர் விஜய்யுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது நீண்ட நாள் முயற்சி.. ஆனால், அது நிறைவேறவில்லை. இந்நிலையில், இது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சுந்தர்.சி பேசியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

தமிழில் முன்னணி கதாநாயகர்கள் அனைவருடன் இணைந்து பணியாற்றி விட்டேன். ஆனால், நடிகர் விஜய்யுடன் இணைந்து பணியாற்றும் அந்த வாய்ப்பு மட்டும் கிட்டவில்லை… நடிகர் விஜய்க்காக உருவாக்கப்பட்ட எட்டு கதைகளை அவரிடம் கூறினேன். ஆனால், பல்வேறு காரணங்களால், இணைந்து பணியாற்ற முடியாமல் போய் விட்டது.. அதற்கு சில காரணங்களைக் அவர் வெளிப்படையாகவே கூறி எனது படங்களில் மறுத்து விட்டார்.

ஆனால் அந்த கதைகள் அனைத்தும், வேறு முன்னணி நடிகர்களை வைத்து எடுக்கப்பட்டு, எல்லாமே பெரிய வெற்றி பெற்றது. எனக்கும் நிறைய பணம் கிடைத்தது. அப்படி பார்க்கும்போது, நடிகர் விஜய், அந்த கதைகளில் நடிக்க மறுத்து, எனக்கு பணத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்” என கூறியுள்ளார் சுந்தர்.சி. ஒருவேளை சுந்தர்.சியின் படத்தில் விஜய் நடித்திருந்தால் களைகட்டும் புதுவித காமெடியில் விஜய்யை அவரது ரசிகர்கள் பார்த்து ரசித்திருப்பார்கள்.. பரவாயில்லை.. இப்போதும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை.. இன்னும் காலம் இருக்கிறது தானே..?