ராகவா லாரன்ஸ் மக்களுக்கு விடுத்த வேண்டுகோள்!


கரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாடெங்கிலும் 144 தடை உத்தரவு போடப்பட்டு மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சினிமா நட்சத்திரங்கள் பலரும் பல்வேறு விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குனரும் நடிகருமான ராகவாலாரன்ஸ் மக்களுக்கு உருக்கமாக தனது வேண்டுகோளை வெளியிட்டுள்ளார்.

அதில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஒரே வழிதான் இருக்கிறது. யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். ஊருக்கு செல்கிறேன் என்று பெற்றோர்களுக்கு நோயை பரப்பி விட்டு விடாதீர்கள். காலில் விழுந்து கேட்கிறேன் என்று கூறியுள்ளார்.