பிப்ரவரி மாதம் தமிழ் – தெலுங்கில் வெளியாகும் ‘பொட்டு’!

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “ பொட்டு “

இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

வசனம் – செந்தில் / ஒளிப்பதிவு – இனியன் ஹரீஷ்

இசை – அம்ரீஷ் / பாடல்கள் – விவேகா, கருணாகரன்,சொற்கோ, ஏக்நாத்

ஸ்டன்ட் – சூப்பர் சுப்பராயன் / எடிட்டிங் – எலீசா

கலை – நித்யானந் /நடனம் – ராபர்ட்

தயாரிப்பு மேற்பார்வை – ஜி.சங்கர்

தயாரிப்பு – ஜான்மேக்ஸ், ஜோன்ஸ்

கதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார் – வடிவுடையான்.

மருத்துவ கல்லூரி பின்னணியில் படு பயங்கர ஹாரர் படாமாக உருவாகி உள்ளது “ பொட்டு “

தமிழில் ஏற்கனவே சென்சார் செய்யப்பட்டு U/ A பெற்று, தெலுங்கு சென்சாருக்காக காத்திருந்த பொட்டு நேற்று தெலுங்கில் சென்சார் செய்யப்பட்டு U/ A சான்றிதழ் பெற்றுள்ளது. எனவே வருகிற பிப்ரவரி மாதம் படத்தை தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது.

தெலுங்கில் NKR பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் பொட்டு படத்தை ஒரு கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.