அனுபமாவை பார்த்து ஆனந்தி கற்றுக்கொள்ளவேண்டும்..!


சமீபத்தில் அதர்வா படத்தில் இருந்து ஆனந்தி விலகியதாக செய்திகள் வெளியானது. ஏற்கனவே மூன்று ஹீரோயின்கள் இருப்பதாகவும், அவருக்கு முக்கியத்துவம் இல்லாத நான்காவது கேரக்டரை கொடுத்ததாகவும் அதனால் தான் அந்தப்படத்தில் இருந்து ஆனந்தி விலகினார் என்றும் சொல்லப்படுகிறது.

பொறியாளன் படத்தில் அறிமுகமான ஆனந்தி இதுவரை நான்கைந்து படங்களில் நடித்திருப்பாரா..? எதுவும் பெரிய ஹிட் இல்லை என்பதால், ஆனந்தி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தையும் தற்போது வேல்யூவையும் உணரவில்லை என்றுதான் சொல்லவேண்டும்..

மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தில் நடித்து ஒரேநாளில் பாப்புலரான சுருட்டை முடி நடிகை அனுபமா பரமேஸ்வரனை தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு தெரியும்.. அவருக்கு தெலுங்கு ‘பிரேமம்’ மற்றும் தனுஷின் ‘கொடி’ ஆகிய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்து நடித்துக்கொண்டிருந்த சமயத்தில் தான் பிருத்விராஜ் படத்தில் ஒரே ஒரு காட்சியில் அதிலும் கிளைமாக்ஸில் மட்டுமே வரும் கேரக்டரை கொடுத்தார்கள்..

அவர் ஆனந்தியைப்போல பந்தாவெல்லாம் பண்ணவில்லை. சந்தோஷமாக ஒப்புக்கொண்டு நடித்துக்கொடுத்தார். ஆனால் ஆனந்தியோ நான்கு ஹீரோயின்களில் ஒருவராக நடிக்க வந்த வாய்ப்பையே அது சொத்தை, இது சொத்தை என கூறி ஒதுக்கியுள்ளது அவரது தனிப்பட்ட விருப்பம் என்றாலும், சினிமாவில் நீண்ட காலம் தாக்குப்பிடிப்பதற்கான செயல் அல்ல என்பது மட்டும் உண்மை.. அனுபமாவை பார்த்து ஆனந்தி கற்றுக்கொள்ள வேண்டும்.